ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்குள் அனுமதி: டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு 7 நாட்களில் அனுமதி வழங்குவது குறித்து சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர், ‘‘ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரும் மனுக்கள் மீது போலீசார் பதிலளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.

அனுமதி கோரும் மனுக்களை சம்பந்தப்பட்ட போலீசார் 7 நாட்களுக்குள் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் அல்லது அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால், அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். இதுதொடர்பாக டிஜிபி தரப்பில் அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் புதிதாக ஓர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது