சென்னை: சென்னையில் நடிகை சோனாவை வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டிய இருவரை மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மதுரவாயலை சேர்ந்த சிவா, லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தி முனையில் மிரட்டி, வீட்டில் இருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சி; சோனா கத்தி கூச்சலிட்டதால் தப்பியோடினர்.