நடிகை மம்தா குல்கர்னி மீதான போதை பொருள் வழக்கு ரத்து: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: கடந்த 2016ம் ஆண்டு ஒரு கிலோ எபிட்ரேன் என்ற போதை பொருளை வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின் விக்கி கோஸ்வாமி என்பவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் கடத்துவதற்காக கென்யாவில் ஒரு ஓட்டலில் சதி திட்டம் தீட்டப்பட்டது. இதில், விக்கி கோஸ்வாமி, நடிகை மம்தா குல்கர்னி கலந்து கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மம்தா குல்கர்னி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,பாரதி டோங்கரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு,மம்தா குல்கர்னிக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்தனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு