இந்த வழக்கை விசாரித்த எழும்பூரில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது அப்பீலை ஏற்க முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இந்த வழக்கில் சரண் அடைவதில் இருந்து நடிகை ஜெயப்பிரதாவுக்கு விலக்கு அளித்து, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் இஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.