அப்போது இருதரப்பு வாதங்களை தொடர்ந்து, அழகப்பனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். நடிகை கவுதமி பாஜவில் இருந்த போது மோசடி நபர் அழகப்பன் மீது மேலிடத்தில் தனது சொத்துக்களை அபகரித்து விட்டதாக ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
ஆனால் பாஜ மேலிடம் அதை கண்டுகொள்ளவில்லை. அழகப்பன் பாஜ மேலிட நிர்வாகிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே நடிகை கவுதமி வேறு வழியின்றி தனது சொத்துக்களை மீட்க கடந்த செப்டம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.