இதற்காக 17 பேர் பன்வெல்லில் உள்ள சல்மானின் பண்ணை வீட்டை பிப்ரவரி மாதம் நோட்டம் விட்டனர். இது தொடர்பாக அஜய் காஷ்யப் என்ற தனஞ்சய் தப்பேசிங், நஹ்வி என்ற கவுரவ் பாட்டியா, வாசீம் சிக்னா என்ற வாப்சி கான் மற்றும் ரிஸ்வான்கான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சல்மான் கானின் பண்ணை வீட்டை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் நோட்டம் விடுவதாக கிடைத்த தகவலை தெடர்ந்து இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டதாக பன்வெல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதின் தாக்கரே தெரிவித்தார். கைது செய்யபட்டவர்களுள் ஒருவரான காஷ்யப், சல்மானை கொலை செய்வதற்காக ஏகே 47 ரக துப்பாக்கியை வாங்குவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த டோகர் என்பவருடன் தொடர்பு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தாக்குதலுக்குப் பிறகு தலைமறைவாக திட்டமிட்ட அவர்கள், தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் சந்திக்க முடிவு செய்ததாகவும், அங்கிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.