23ம்தேதி மாநாடு நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் 10 நாட்களே உள்ளதால் திட்டமிட்டப்படி ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய அவகாசம் இல்லாததால் மாநாட்டை தள்ளிப்போடுவது குறித்து நீலாங்கரை வீட்டில் நடிகர் விஜய், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் அக்டோபர் 16ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாநாடு ஒத்திவைப்பை அதிகாரப்பூர்வமாக கட்சி சார்பில் அறிவிக்கப்படவில்லை