நடிகர் வடிவேலு மனு: சிங்கமுத்து பதில்தர ஆணை

சென்னை: ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதில்தர உத்தரவிட்டுள்ளார். யூ டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து தந்த பேட்டியில், பல பொய்களை கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு