நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான்தான் இருந்தேன்: உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில்

சென்னை: நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான்தான் இருந்தேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். அவரைப் பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் பேட்டியில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, சிங்கமுத்து மீது ரூ.5 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய ரயில்வேயில் 8113 இடங்கள்

ஓவியம் – சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிப்பு!!

மேல்முருக்கம்பட்டு அரசுப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்