ஆனால் பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் முடியாது. எல்லோரையும் அரவணைத்து செல்கிறேன். டெல்லிக்கு சென்று பேசுங்கள். என்னை தூக்குங்கள். ரூ.6 ஆயிரத்து 500 தான் விமான டிக்கெட். நானே டிக்கெட் போட்டுத் தருகிறேன். என்னை தூக்க முயற்சி எடுங்கள். தமிழக பாஜ, எல்லோருக்கும் சொந்தமானது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்து வருகிறது. புதிய கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை உருவாக்கினால்தான் இந்த பகுதி வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வழிபட்டார்.