நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. திரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் ஐகோர்ட் உறுதி செய்தது. தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் உறுதி செய்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு தனி நீதிபதியால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறு ஆய்வு மனு தொடரப்பட்டது.

Related posts

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் 3,40,784 கார்கள் விற்பனை

ரெட்டியார்சத்திரம் அருகே தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா பெண்கள் 2 பேர் கைது