சென்னை: எப்போதும் நான் சுறுசுறுப்பாக இருக்க ஊக்கம் கொடுப்பவர்கள் மாணவர்களே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தலைநிமிரும் தமிழகம் என்ற எண்ணத்தை கல்லூரி அனைவரிடம் கொண்டு சேர்க்கவே போட்டி நடத்தப்படுகிறது. இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவித்து வருகிறோம் என தெரிவித்தார்.