அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘95 சதவீத தீக்காயத்துடன் இருந்த ஜோதியால் தெளிவாக வாக்குமூலம் அளித்திருக்க முடியாது. எனவே இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவு மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகளை எப்படி சந்தேகிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ரமேஷ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்ததோடு, ரமேஷின் ஆயுள் தண்டனைடிய உறுதி செய்தனர்.