இது பணியில் உள்ள அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல். இவர்களை கைது செய்ய வேண்டும் என்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘‘எஸ்பி குறித்து சமூக வலைத்தளத்தில் மனுதாரர் எந்த இடத்திலும் தவறாக பதிவிடவில்லை. நெட்டிசன்கள் தான் அவதூறாக பதிவிட்டுள்ளனர்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் எஸ்பி குறித்து எதுவும் பதிவிடவில்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. காவல் துறை அதிகாரிகள் குறித்தும், எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்ட நெட்டிசன்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.