மதுரை: நெல்லை நயினார்குளத்தில் இருந்து விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயினார்குளத்தில் வழங்கப்பட்டுள்ள மீன்பிடி குத்தகையை ரத்து செய்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க கோரி நயினார்குளம் பாசன விவசாய சங்கம் சார்பில் நெல்லையப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தத்து.