பழநி பிரசாதம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, முறுக்கு, அதிரசம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தேன், தினை மாவு போன்றவை தரமான முறையில் தயார் செய்து பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகம் மூலம் காலாவதியான பொருட்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. பொய்யான தகவல்களை பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்