பனாஜி: கோவாவில் டிஜஜியாக ஐபிஎஸ் அதிகாரி கோன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் திங்களன்று இரவு விடுதி ஒன்றில் பெண்ணிடம் டிஐஜி தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தை கோவா முன்னணி கட்சி எம்எல்ஏ சாவந்த சட்டப்பேரவையில் எழுப்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐபிஎஸ் அதிகாரி கோன் டிஐஜி பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.