இந்த தாக்குதலில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை வக்கீல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில்,சந்தேஷ்காலி சம்பவத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரியவருகிறது.
அதில்,அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். இதை விசாரித்த நீதிபதி ஜெய் சென்குப்தா அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று வாய்மொழியாக போலீசுக்கு உத்தரவிட்டார்.