அந்த மனுவில் குற்றவியல் விசாரணைகளில் இருந்து ஆளுநருக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 361ஐ ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவியல் விசாரணைகளில் இருந்து ஆளுநர்களுக்கு விலக்கு அளிக்கும் 361வது சட்டப்பிரிவை ஆய்வு செய்ய ஒப்புதல் அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு மீது மேற்குவங்க அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பையும் சேர்க்க மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.