9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

வேதாரண்யம்: தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் போன்ற பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வேதாரண்யம் பகுதியில் வெயில் தாக்கம் தற்போது அதிகரித்து காணப்படுவதால் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. தற்போது ஒரு டன் உப்பு ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் உப்பின் விலை உயர வாய்ப்பு உள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்