ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத ஆசிட் டேங்க் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. டேங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அலுமினியம் குளோரைடு என்ற ஆசிட் தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியது. இதனால் வெளியேறிய நச்சுப் புகையால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாச பிரச்சினையால் அவதிக்கு உள்ளாகினர்.