Thursday, June 27, 2024
Home » கூட்டாளியை கொலை செய்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவல்

கூட்டாளியை கொலை செய்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவல்

by Karthik Yash

விருதுநகர்: கூட்டாளியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை, 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர், அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, வரிச்சியூர் செல்வம் ஆட்கள் கடந்த 2021ல் சென்னையில் வைத்து செந்தில்குமாரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பின்னர் அவரது உடலை வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசினர்.

இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்தை, விருதுநகர் தனிப்படை போலீசார் கடந்த 21ம் தேதி கைது செய்து சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வரிச்சியூர் செல்வத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், தனிப்படை போலீசார் கடந்த 23ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கவிதா, வரிச்சியூர் செல்வத்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று அனுமதி வழங்கி, மீண்டும் ஜூலை 1ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜரான வரிச்சியூர் செல்வத்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

fifteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi