வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் மன உளைச்சலுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளருக்கு 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி விண்ணப்பம் அளித்த பத்மினிக்கு, 2 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இழப்பீட்டை 25 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி பத்மினி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், சுகாதாரத் துறை செயலாளர் தனது மனதை செலுத்தி, இழப்பீட்டை முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை பின்பற்றாமல், மனுதாரரின் கருத்தை கேட்காமல் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டை அதிகரித்துத் தரக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, மனுதாரரின் கருத்தைக் கேட்டு ஆறு வாரங்களுக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.