சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த பச்சபாளிமேடு அருகே சென்றபோது, டிரைவர் கண்யர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னால் சென்ற பழைய இரும்பு பொருட்கள் ஏற்றுச்சென்ற லாரி மீது மோதியது. இதில், வேனில் வந்த 9 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.