டெல்லி: ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளிகள் 1 அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும் என RTI கேள்விக்கு இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது. ஒவ்வொரு பயணம் முடிந்ததும் தலையணை உறை, வெள்ளை போர்வைகள் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும். கம்பளிகளை மடித்து ரயில்களிலேயே வைத்துவிடுவோம். கறை, துர்நாற்றம், ஈரம் இருந்தால் மட்டுமே கம்பளிகளை சலவைக்கு அனுப்புவோம் என ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.