இந்த பயணத்தில் பட்டத்து இளவரசர் நஹ்யான் எரிசக்தி, இணைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். டெல்லியில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு தரப்பு உறவு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து மும்பை செல்லும் நஹ்யான் பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.