தலைமறைவு ரவுடி கைது

அண்ணாநகர்: கோயம்பேடு சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ககில் (24). இவர் பிரபல ரவுடி. இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கோயம்பேடு பகுதியில் அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ககில் கடந்த இரண்டு மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து ரவுடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோயம்பேடு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரவுடியின் செல்போன் டவரை வைத்து நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி