‘‘ஊராட்சி பெண் தலைவர் மேல அதிரடி ஆக்ஷன் வரப்போறதா சொல்றாங்களே.. என்ன விஷயம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்டத்தில் கோட்டையில் முடியும் ஊர் பெயருடைய ஊராட்சிக்கு ஐந்து நிறம் குறிக்கும் பெயர் கொண்ட பெண் தலைவராக உள்ளார். இவரை ஓரங்கட்டி விட்டு மக்கள் பிரதிநிதிக்கான அலுவலகத்தையே இலைக்கட்சி நிர்வாகியான துணைத்தலைவரானவர், கட்சி அலுவலகமாக மாற்றி வைத்திருக்கிறார். கூட்ட அரங்கிலும் சேலத்துக்காரர் படங்களையே மாட்டி வைத்திருக்கிறார். மாஜி பால்வளத்துறை மந்திரியின் தீவிர ஆதரவில் அரசியல் செய்து வரும் இவர், ஏற்கனவே, தான் சார்ந்திருக்கும் பகுதியின் இலைக்கட்சி மாவட்ட செயலாளரை புறக்கணித்து கட்சி நிகழ்ச்சி மற்றும் அப்பகுதியில் நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் மாஜி பால்வளத்தையே அழைத்து வருகிறாராம்.
இதனால் இப்பகுதி இலைக்கட்சியின் அத்தனை நிர்வாகிகளும், தொண்டர்களும் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். இவரது அணுகுமுறையால் மாதந்தோறும் நடக்கும் ஒன்றிய கூட்டத்திற்கு 20 இலைக்கட்சி கவுன்சிலர்கள் இருந்தபோதும், வெறும் 5, 6 கவுன்சிலர்களே வருகிறார்களாம். ஊராட்சியில் பட்டாசு கடைகள் உரிமை முதல் பட்டாசு ஆலைகள் வரை பல கோடிக்கு வைட்டமின் ‘பி’ அள்ளி குவித்து வரும் இவர் மீது, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் குவிந்து வருகிறதாம். ஊழல் ஒழிப்புத்துறை பார்வையிலும் இப்போது இவர் விழுந்திருக்கிறாராம். விரைவில் அதிரடி ஆக்ஷன் இருக்கும் என்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புகார் வந்தாலே குஷியாகிறாராமே அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்ேபட்டை மாவட்டத்துல சோ என்று தொடங்கி லிங்கர் என்று முடியுற தாலுகா இருக்குது. இந்த தாலுகாவுல பிக் ஏரி ஒன்னு இருக்குது. இந்த ஏரிக்கு நீர்வரத்து கால்வாய்கள் நீண்ட நெடிய தூரம் இருக்குது. பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கால்வாய தனிநபர்கள் சிலர் கடை கட்டி ஆக்கிரமிச்சிருக்காங்களாம். இந்த ஆக்கிரமிப்பு சம்மந்தமாக பப்ளிக் ஒர்க்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு புகார்கள் அதிகளவுல போகுதாம். அங்க இருக்குற அதிகாரி இதுபோல புகார் வந்தாலே குஷியாகிடுவாராம். காரணம் அந்த புகாரை விசாரிக்க போறேன்னு சொல்லிட்டு, சம்திங் வாங்கிட்டு வந்துடுவாராம். அந்த ஏரியாவுல இதேபோல தொடர்ந்து நீர்வரத்து கால்வாய மூடிட்டு பிளாட் போட்டு விற்பனை ெசஞ்சு வர்றாங்களாம். இதுபோன்ற ஆக்கிரமிப்புங்க அந்த மாவட்டத்துல அதிகளவுல இருக்குதாம். இதை கண்டுபுடிச்சு உடனே தடுக்கணும்.
இல்ேலன்னா ஏரிங்களுக்கு தண்ணீர் வர்றது தடைபடும்னு விவசாயிங்க வேதனையை வெளிப்படுத்தி வர்றாங்க. எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிங்க உடனே அந்த பிக் ஏரியையும், ஏரி கால்வாய்களையும் ஆய்வு செஞ்சு உரிய நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கிகள் ஆதரவோட கள்ளச்சாராயம் நடக்கிறதா புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை புறநகரில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் ஒருவர் காவல்துறை அதிகாரிகள் சிலரை ைகக்குள் ேபாட்டுக்கொண்டு, சட்டவிரோத ெசயல்களில் ஈடுபட்டு வருகிறாராம். குறிப்பாக, கள்ளச்சாராய கும்பலுடன் கைகோர்த்து செயல்படுகிறாராம். இவருக்கு அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் பக்கபலமா இருப்பது, இவரது தொழிலை விருத்தி செய்ய உதவியா உள்ளதாம்.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சில சமூக ஆர்வலர்கள், மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். இதனால், காக்கிகள் உதவியுடன் கள்ளச்சாராயம் சக்கை போடு போடுகிறது. அத்துடன், கஞ்சா விற்பனையும் ஜரூராக நடக்கிறதாம். கேரளாவில் இருந்து வரும் கஞ்சா வியாபாரிகளை கைக்குள் ேபாட்டுக்ெகாண்டு, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா ெபாட்டலங்களை தள்ளி விடுகிறார்களாம். கள்ளச்சாராயத்தையும், கஞ்சாவையும் காக்கிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அப்பகுதி மக்களிடம் ெபரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மா.செ. மேல ஏன் காண்டுல இருக்காரு இலைக்கட்சி தலைவரு…’’ என்று சந்தேகத்தோடு கேள்வியை வீசினார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி சிட்டியில இலைக்கட்சியில மா.செ.வாக இருப்பவர், தன்னிடம் தெரிவிக்காமல் யாரும் இலைக்கட்சி தலைவரை சந்திக்க விடக் கூடாதுனு கண்ணும், கருத்துமா இருந்து வர்றாரு. அப்படி யாராவது கட்சிக்காரருங்க சந்திச்சிட்டாங்க அப்டின்னா, அவங்கள பற்றி கட்சி மேலிடத்தில, அவதூறா போட்டுக் குடுத்துட்டு வந்தாரு. கடந்த சில நாட்களுக்கு முன்ன, கட்சியில உள்ளவர்களுக்கு பொறுப்பு வழங்கினாங்க. அதுல மா.செ. யார், யாருக்கெல்லாம் ரெகமண்ட் செஞ்சாரோ, அவங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. பொறுப்பு வாங்கினவங்க, இலைக்கட்சி தலைவர சந்திச்சு நன்றி தெரிவிச்சாங்க.
அப்போது, அனைவரும் ஒரே மாதிரியாக சால்வை, மாலை, ஸ்வீட் பாக்ஸ் கொண்டு போனாங்களாம். இதை பார்த்த இலைக்கட்சி தலைவரு, என்ன பாத்துட்டு வரும்படி உங்க எல்லாத்தையும் மா.செ. அனுப்பினாரா, நீங்களா வரலையா? உங்கள அனுப்பி வச்சி, என்கிட்ட நல்ல பேரு எடுக்கலாமுன்னு நெனக்கிறாரா அப்டின்னு கோவப்பட்டு பேசினதால, புதுசா நியமனம் செய்யப்பட்டவங்க அதிர்ந்து போயி திரும்பினாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.