மது ஒழிப்பு மாநாடு விசிக நன்றி அறிவிப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பை ஏற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது-போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு திரண்டுவந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இம்மாநாட்டிற்கு தங்களது கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்த திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தோழமை கட்சியின் தலைவர்களுக்கும் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி ஊக்கப்படுத்திய பாலபிரஜாபதி அடிகளாருக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு க்கும், காவல்துறைக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை