தென்காசி: ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். அரசுபொதுத்தேர்வு ஏதும் இருப்பின் தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 19 சனிக்கிழமை பணி நாளாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.