சென்னை: ஜூலை 29 ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு கூடுதலாக 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, திருப்பதி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சி, ராணிப்பேட்டை, ஆரணி, குடியாத்தம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் வசதிக்காக திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.