ஆடிக்கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 560 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: ஜூலை 29 ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு கூடுதலாக 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, திருப்பதி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சி, ராணிப்பேட்டை, ஆரணி, குடியாத்தம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் வசதிக்காக திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு