சென்னை : ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பவானி கூடுதுறையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் புனித நீராடி, படித்துறையில் படையலிட்டு வழிபாடு செய்தனர். அதே போல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றுப் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.காவிரி கரையோர மாவட்டங்களில் புதுமணத் தம்பதிகள் தாலிபெருக்கு நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.