திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகள் இன்று தொடங்குகின்றன. இதையொட்டி கோயில் நடை நேற்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். கனமழையிலும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தினமும் காலை 5.20 மணி முதல் 10 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.