இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆர்.எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை எல்காட் நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து துவக்கி வைத்தது. அதிக ஆதார் எண் பெறப்படாத பகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆதார் பதிவு மற்றும் பிழைத்திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்படும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஆதார் மையங்கள் செயல்பட உள்ளது. இவ்வாறு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா தெரிவித்தார்.