அந்த ஆவணங்களை வைத்து தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி அதில் எனது பெயரில் ரூ.5 லட்சத்திற்கு லோன் பெற்று ஏமாற்றிவிட்டார். லோன் கட்டவில்லை என்று வங்கியில் அதிகாரிகள் தன்னிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்’ என புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, பாலாஜி மற்றம் சுபத்ரா தேவி ஆகியோர் திருவல்லிக்கேணி பகுதியில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களுக்கு உதவி செய்வதாக கூறி, அவர்களின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று வங்கிகளில் ரூ.45 லட்சம் வரை லோன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து போலீசார், மோசடியில் ஈடுபட்ட பாலாஜியை நேற்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சுபத்ரா தேவியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் 13க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.