விமான கழிவறையில் சிகரெட் புகைத்த பயணி: அலாரம் ஒலித்ததால் சிக்கினார்

மும்பை: டெல்லி விமான நிலையத்தில் இருந்து புதனன்று மும்பைக்கு இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் சுமார் 176 பயணிகள் பயணம் செய்தனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கலீல் காஜமுல் கான் என்ற பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். அவர் அங்கு சிகரெட் புகைத்துள்ளார். இதனால் புகை எழுந்த நிலையில் விமானத்தில் இருந்த சென்சார் கருவியின் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனை தொடர்ந்து விமான ஊழியர்கள் விமானத்தில் சோதனை நடத்தினார்கள்.

கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சிகரெட் துண்டு மற்றும் அணைத்த தீக்குச்சி கிடந்துள்ளது. இது குறித்து விமான ஊழியர்கள் விசாரித்த போது கலீல் புகை பிடித்ததை ஒப்புக்கொண்டார். விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் பாதுகாப்பு போலீசார் மூலமாக கலீல், சாஹர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்