சென்னை: “ராஜ் பவன் நம்முடைய இடம்தான், புதிய சட்டமன்றம் கட்டடம் கட்ட வேண்டும் என்றால் அந்த இடத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம், கிண்டி ரேஸ் கோர்ஸும் நம்ம இடம்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த ஆட்சி காலத்திலேயே புதிய சட்டமன்ற கட்டடம் அமைக்கப்படணும்” என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதிய சட்டமன்ற கட்டடம் கட்டப்பட வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அவை முன்னவர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.