நடுரோட்டில் போதையில் அரை நிர்வாணமாக சுற்றிய இளம்பெண்: இளைஞர்களை பிளேடால் வெட்ட முயற்சி

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அசோக் நகரில் நேற்றிரவு இளம்பெண் ஒருவர் சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்றார். எதிரே வருபவர்களை மிரட்டியபடியும், வாகனங்களின் குறுக்கே நின்றபடியும் அட்டகாசம் செய்துள்ளார். திடீரென தான் அணிந்திருந்த மேல் ஆடையை கழற்றி வீசிவிட்டு அரை நிர்வாணமாக சுற்றினார். இதை அங்கிருந்த இளைஞர்கள் பார்த்து தடுக்க முயன்றனர். அவர்களை அந்த பெண், தான் வைத்திருந்த பிளேடால் வெட்ட முயன்றார். அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், தோமல்குடா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் அவ்வழியாக வந்த போக்குவரத்து பெண் காவலர்கள், அந்த பெண்ணை பிடித்து ஆடைகளை அணிய வைத்து ஆட்டோவில் ஏற்றி, தோமல்குடா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் குடிபோதையில் இவ்வாறு நடந்தது தெரிய வந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்த அவருக்கு சில மணி நேரங்களுக்கு பிறகு போதை தெளிந்ததால் பஸ்சில் வீட்டுக்கு சென்றதாகவும், அவரது பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது