இந்நிலையில், பள்ளி விடுமுறையையொட்டி மனைவி வெங்கடலட்சுமி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு மனைவிக்கு ஒய்என் ராவ் போன் செய்து பேசியபடியே திடீரென கதவை தாழிட்டுக்கொண்டு போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினருக்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர்கள் சென்று பார்த்தபோது ஒய்என் ராவ் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.