விமானப்படை பயிற்சியின்போது பாராசூட் திறக்காததால் கமாண்டோ கீழே விழுந்து பலி

திருமலை: பனகார் விமானப்படை நிலையத்தில் பாராசூட் திறக்காததால் ஆந்திராவை சேர்ந்த கடற்படை கமாண்டோ அதிகாரி சந்தக கோவிந்த் கீழே விழுந்து பலியானார். மேற்கு வங்காளம் மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பனகார் விமானப்படை நிலையத்தில் விமானங்களில் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், சிபுருபள்ளி மண்டலம் பர்லா கிராமத்தை சேர்ந்த கடற்படை கமாண்டோ அதிகாரியான சந்தக கோவிந்த்(31) பராட்ரூப்பர்ஸ் பயிற்சிக் குழுவில் ஈடுபட்டு வந்தார்.

அவ்வாறு ராணுவ விமான பயிற்சி திட்டத்தில் சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் இருந்து கீழே குதித்து சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அப்போது, விமானத்தில் இருந்து கீழே குதித்தபோது கோவிந்தின் பாராசூட் திறக்காததால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தேடி கண்டுபிடித்து பர்ஜோரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

Related posts

ஜி.ஹெச் கட்டுமான சிலாப் இடிந்து ஒருவர் பலி

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்

என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல்