அம்ரேலி: குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் சுர்க்கப்பரா கிராமத்தில் போர்வெல் ஒன்றில் ஆரோஹி என்ற ஒன்றரை வயது குழந்தைவிழுந்து 50 அடியில் சிக்கி கொண்டது. 17 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் ஆரோஹி வௌியே எடுத்து வரப்பட்டார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.