5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

ஊத்துக்கோட்டை: ஆரணியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.பெரியபாளையம் அருகே ஆரணி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி படித்து வருகிறார். இவருக்கு அதே பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றும் 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையறிந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தாளாளரிடம் கூறினர். அப்போது அந்த சிறுவனை அங்கு பார்த்த உடனே அவனை பிடித்துச்சென்று ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்