Tuesday, October 22, 2024
Home » தனுசு ராசிக் குழந்தை தங்கப் பிள்ளை

தனுசு ராசிக் குழந்தை தங்கப் பிள்ளை

by Lavanya

தனுசு ராசி, குரு ராசி என்பதனால், தனுசு ராசியில் பிறக்கும் குழந்தைகள் இளமையிலேயே பெரியவர் களைப் போல மற்ற குழந்தைகளுக்குப் புத்தி சொல்பவர்களாக விளங்குவார்கள். கொஞ்சம் அசந்தால் பெரியவர்களைக்கூட இப்படி செய் அப்படி செய் என்று அதிகாரம் செய்வர்.
இன்பத்தின் பெயர் தனுசு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் தனுசு ராசிக் குழந்தைகள், பிறருக்கு தன்னாலான அறிவு சார்ந்த உதவிகளைச் செய்து, எல்லோரும் தன்னை அறிவிலும் அழகிலும் சிறந்தவராக ஏற்றுக்கொள்ள வேண்டும், தன்னை ரசிக்க வேண்டும், ஆராதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் திகழ்வார்கள். இப்படி எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையிலான குழந்தைகளை மட்டுமே தம்மோடு வைத்திருப்பார்கள்.

வெளிப்படையான குணம் நட்புணர்வோடு பழகும் தனுசு ராசிக் குழந்தைகள், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதில்லை. இவர்களிடம் கள்ளம், கபடம், சூது கிடையாது. ஆனால் எப்போதும், தான் மட்டுமே உசத்தி என்ற கர்வத்துடன் இருப்பர். தனிமை என்றால், இவர்களுக்கு அச்சம். எனவே, எப்போதும் மகிழ்ச்சியான மனிதர்களோடு இருக்க விரும்புவார்கள்.
தனுசு ராசிக் குழந்தைகள், பெரியவர்கள் அறையில் உட்கார்ந்து பெரியவர்களிடம் கதை கேட்டு அல்லது அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த பின்பு, அந்த விஷயங்களைத் தனக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வர். அறிவியல், அரசியல், புராணம், ராக்கெட் சயின்ஸ், எலக்ட்ரிக்கல்&எலெக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் பற்றி சிறு வயதிலேயே தெரிந்து வைத்திருப்பர். அறிவுத்தேடல் இவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காகும்.

அழுகையால் காரியசித்திதனுசுராசிக் குழந்தைகள், சட் என்று உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள். மனம் உடைந்து, அழுதுவிடுவது வழக்கம். இவ்வளவு அறிவான குழந்தையை
அழவைத்து விட்டோமே என்று பெற்றோரும் ஆசிரியரும் வருந்தும் வகையில் நடந்து கொள்வார்கள். இவர்கள் எல்லோரையும் குற்றம் சொல்வார்கள். ஆனால், இவர்கள் மீது ஒருவர் குற்றம் சுமத்தினால் அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் மனம் உடைந்து அழுதுவிடுவர்.
பெரியோரைத் துணைக் கோடல் தனுசுராசி குழந்தைகள் பெரும்பாலும், பெரியவர்களைத் தம் முன்மாதிரியாகக்கொள்வர். சிலர் அம்மாவின் வாசத்தில் இருக்க விரும்புவார்கள். அதை ரசிப்பார்கள். அம்மா சேலையை போர்த்திக்கொண்டு படுக்கும் ஆண் குழந்தைகள், தனுசு ராசிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு.

பலர் தாய்ப் பாசம் மிகுந்தவர்கள். தங்கள் தாயை ஒரு ரோல் மாடலாக ஏற்றுக் கொள்வர். சிலர் தந்தைப் பாசம் மிகுந்தவர்களாக இருந்து, தந்தையை தங்கள் ரோல் மாடலாக முன்னோடியாக ஏற்றுக்கொள்வதுண்டு. நல்லபேரை வாங்கும் பிள்ளைகள்தனுசுராசிக் குழந்தைகள், நல்ல பிள்ளை என்ற பெயர் எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். பொதுவாக, இவர்கள் பொய் புரட்டு செய்பவர்கள் கிடையாது. நல்லவன் வாழ்வான் கெட்டவன் அழிவான் என்ற கருத்துடன் வாழ்கின்றவர்கள். அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது இவர்களின் கொள்கை. கல்வியும் கற்பனையும் சிறுவயதிலேயே பெரிய லட்சியங்களோடு வாழ்க்கையைத் தொடங்கும் தனுசு ராசிக் குழந்தைகள், எப்போதும் புதிது புதிதாக ஒன்றை அறிந்துகொள் வதில் ஆர்வம் கொள்வர்.

இளம்வயதிலேயே என்னென்ன படிக்க முடியுமோ எல்லாவற்றையும் படித்துவிடுவர். கற்பனைத் திறனும் காவிய நாட்டமும் உள்ளவர்கள். தங்களை ஒரு ஜேம்ஸ் பாண்டாகக் கருதி துப்பறியும் கதைகளைத் தானே கற்பனையில் உருவாக்கி தன்னுடன் இருக்கும் சிறுவர்களுக்குக் கூறுவர் அல்லது கனவில் தன்னை ஒரு ராஜராஜ சோழன் அல்லது நரசிம்ம பல்லவன் போல கற்பனை செய்துகொண்டு, வாழ்வர். தங்களை ஒரு கிருஷ்ணனை போலவும் முருகனைப் போலவும் கற்பனை செய்து கொள்வர். தனுசு ராசி பெண் குழந்தைகளும் அப்படித்தான். சந்திரமுகியில் வரும் ஜோதிகாவை போல உள்ளுக்குள் கற்பனையில் ஒரு வாழ்க்கையும் வெளியே நிஜத்தில் ஒரு வாழ்க்கையும் வாழ்வர். இவர்கள் மனதளவில் ஒரு ராஜகுமாரிதான். அப்படி தங்களை பெற்றோரும் மற்றோரும் நடத்த வேண்டும் என்றும் விரும்புவார்கள்.

தோற்றப் பொலிவுதனுசு ராசி குழந்தைகள், கவர்ச்சியான சிரிப்பு, பளிச்சென்ற மாசு மறுவற்ற முகம், பூசினார் போன்ற உடல்வாகு கொண்டு பார்ப்பவரை உடனே கவரும் அறிவாளி குழந்தைகளாக இருப்பார்கள். ஒரு `ரைம்ஸ்’ சொல்லு என்றால் `நான் ஸ்டாப்பாக 10 ரைம்ஸ்’ சொல்லி முடிப்பார்கள். புகழ்வெளிச்சத்துக்கு (limelight) ஆசைப்படும் இக் குழந்தைகள் விழா, மேடை, விருந்து என்றால் அனைவரும் தங்களைப் பார்க்கும் படியாக உற்சாகமாக செயல்படுவார்கள். சில குழந்தைகள் மேடை ஏறி பாடலாம், ஆடலாம், கவிதை சொல்லலாம், கடி ஜோக் சொல்லலாம் எப்படியோ அன்றைக்கு centre of attraction இந்தக் குழந்தைதான். கூட்டத்திற்கு வந்தவர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து விடுவர்.

புத்தி கூர்மை உண்டுஎல்லாவற்றையும் எல்லோரையும் கூர்ந்து கவனிக்கும் புத்திக் கூர்மை உடைய தனுசு ராசி குழந்தைகளுக்கு, நல்ல நினைவாற்றலும் இருக்கும். வாய்ப்பாடு, சுலோகம், ஃபார்முலா, போன் நம்பர், முகவரி எல்லாம் அத்துபடி. நினைத்தவுடன், தான் படித்ததை அழகாக விளக்கும் சக்தி உண்டு. பேச்சுத்திறன், எழுத்துத் திறன் அதிகம். ஆனால், பகுப்பாய்வு திறன் குறைவு. காரணம், இவர்கள் பகுப்பாய்வுக்கு நேரம் கொடுக்க விரும்புவதில்லை. பொறுமையாக இருந்து வேண்டியது, வேண்டாதது, நல்லது, கெட்டது பற்றி யோசித்தால் இவர்களுக்கு சரியான விடை கிடைக்கும். ஆனால், இவர்கள் அதிகமாக யோசிக்க மாட்டார்கள். எல்லாம் தனக்குத் தெரியும் என்ற நினைப்பில், சட் என்று பதில் சொல்லி விடுவார்கள். சிந்தித்து பதில் சொல்லுதல் `அனலைஸ்’ (analyze) செய்து ஒரு முடிவுக்கு வருவது என்பது இவர்களிடம் இருக்காது.
எனவே இவர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டுகின்ற, கைபிடித்து கூட்டிச் செல்கின்ற பெற்றோரும் ஆசிரியரும் நண்பர்களும் தேவை. (இவர்களை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்)

முனைவர்: செ.ராஜேஸ்வரி

You may also like

Leave a Comment

fifteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi