பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(62). விவசாயி. இவரது இரண்டாவது மனைவி அறிவழகி(48). இவர்களது மகள் திருமணமாகி கணவருடன் வசிக்கும் நிலையில், மகன் முருகானந்தம் சென்னையில் பணியாற்றி வருகிறார். நேற்றுமாலை முருகானந்தம் தாய் அறிவழகியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டபோதும் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்து அருகில் வசிக்கும் சித்தப்பாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சித்தப்பா வீட்டினர் அங்கு சென்று பார்த்தபோது பெரியசாமி, அறிவழகி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் அறிவழகி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயின், பீரோவில் இருந்த 10 பவுன் நகை என மொத்தம் 20 பவுன் மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறனர்….