சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்தவகையில், பெரிய கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் கடந்த 26ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதில், பெரிய கடைகளை கணக்கெடுத்து மூடுவதில் மாவட்ட நிர்வாகத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில மாவட்ட ஆட்சியர்கள் ‘எத்தனை சதுர அடி இருந்தால் அதை பெரிய கடைகளாக கருதுவது’ என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தனர். இந்தநிலையில், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகளை பெரிய கடைகளாக கருதி அவற்றை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். …