சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இன்று காலையும் பல இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் கூட சில இடங்களில் லேசான மழை பெய்து வர கூடிய நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.நேற்றைய தினத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி, திருவாரூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குமரி கடல் பகுதியில் இருக்கக்கூடிய வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் இந்த இடங்களில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் தமிழகம் முழுவதுமே வறண்ட வானிலை தான் நிலவியது. பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. தொடர்ச்சியாக வெயில் அதிகமாக பதிவாகி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மழை ஆங்காங்கே பதிவாகி வருகிறது. இது இடியுடன் கூடிய மிதமான மழையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை காலை நேரத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது….