விதோக்கரா: குஜராத்தில் பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விதோக்கரா நகரில் கடுமையான வயிற்று போக்குடன் குழந்தைகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட்டன. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைகளுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தைகளை கவனித்து வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியில் 114 நாட்களுக்கு பிறகு ஒருநாளில் அதிகபட்சமாக 2,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் முலம் டெல்லியில் கொரோனா 4-வது கட்ட பரவல் உறுதியாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 44,183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 8,646 பேருக்கு உறுதி செய்யபோட்டுள்ளது. இந்த பாதிப்பு இதுவரை இல்லாதது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். …