சென்னை: கல்பாக்கத்தில் இருந்து மாநகர பஸ் சென்னைக்கு புறப்பட்டது. சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது, தேர்தல் அதிகாரிகள் பஸ் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, அதில் இருந்த ஒரு வாலிபரின் பையில், 4,03,000 இருந்தது. விசாரனையில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தபூ வியாபாரி விக்னேஷ்வர்(21) என்பதும், இவர் நேற்று திருப்போரூர், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பூ வியாபாரிகளுக்கு, பூ சப்ளை செய்துவிட்டு அதற்கான பணத்தை வசூல் செய்து வருவதாகவும் கூறினார். ஆனால், அவரிடம், அதற்கான ஆவணம் இல்லாததால், 4.3 லட்சத்தை பறிமுதல் செய்து, திருப்போரூர் தேர்தல் அலுவலர் சுப்பிரமணியம் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தார்….
பூ வியாபாரியிடம் 4 லட்சம் சிக்கியது
previous post