திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே இருளர் குழந்தைகளுக்கு விளையாட்டுதிடல் திறக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்களுக்கு மாமல்லபுரம் ”விங்க்ஸ் டு ஹோப்” என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக இருளர் இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளின் விளையாட்டு திறனை மேம்ம்படுத்தும் வகையில் ரூ.70 ஆயிரம் மதிப்பில் விளையாட்டுத் திடல் ஒன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன அறங்காவலர்கள் தீபா உமாசங்கர், உமாசங்கர், வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்….