Sunday, October 6, 2024
Home » தாராபுரம் அருகே அதிமுகவினர் வழங்கிய மதுவில் சாராயம் கலந்து குடித்தவர் பலி

தாராபுரம் அருகே அதிமுகவினர் வழங்கிய மதுவில் சாராயம் கலந்து குடித்தவர் பலி

by kannappan

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளது பெரிச்சிபாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). விவசாய தொழிலாளி. இவரது நண்பர்கள் யோகேஸ்வரன், விவேகானந்தன், வசந்த். இவர்கள் நேற்று மாலை தங்களது குடியிருப்பு பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதிமுக வேட்பாளர் ஒருவருக்கு வாக்கு கேட்டு வேனில் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த வேனில் இருந்து கிராம மக்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை விநியோகித்தாக கூறப்படுகிறது. மணிகண்டன் உட்பட 4 பேருக்கும் அதிமுகவினர் மது வழங்கினர். அதனை அருந்தியபோது போதை ஏறாததால் அப்பகுதியில் வழக்கமாக கிடைத்து வந்த கள்ளச்சாராயத்தையும் வாங்கி அதிமுகவினர் வழங்கிய மதுவுடன் கலந்து 4 பேரும் குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் மணிகண்டன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகம் ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். அவரது மனைவி சிந்து நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அவரது கணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. …

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi